பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

163


இலக்கியத்துறையில் வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகவும் (மூன்று பி.எச்டி. மாணவர்கட்கு வழிகாட்டும் தகுதியுடன்), 1996 பிப்ரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றி வருபவர்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து (பிஎச்.டி.) டாக்டர் பட்டம் பெற்றவர். (இந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.) பல எம். ஃபில், பிஎச்.டி மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன; பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), தன்-வரலாறு, வாழ்க்கை வரலாறு (13), திறனாய்வு (20), அறிவியல் (20), ஆராய்ச்சி (6) ஆக 121 நூல்களின் ஆசிரியர்.

இவர்தம் அறிவியல் நூல்களுள் நான்கும், சமய நூல்களுள் நான்கும் தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப்பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன. இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ’அருங்கலைக்கோன்’ என்ற விருதினையும் (1968) தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு திரு.வி.க. விருதையும் (1987 -10,000 வெண்பொற் காசுகள்) இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை - காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினையும் (1991) இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை இராசா சர் முத்தையவேள் விருதையும் (1994 - 50,000 வெண்பொற்காசுகள்), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/164&oldid=1361342" இலிருந்து மீள்விக்கப்பட்டது