இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. நுழைவாயில்
கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை இறைவன் நமக்குக் கருணையோடு அளித்துள்ளான்.
அதிலும் -
கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளின்றி முழுமனிதனாகப் படைத்திருக்கிறான்.
- புல், பூண்டுகளாகவோ -
- மரம் செடி, கொடிகளாகவோ,
- விலங்கினங்களாகவோ
பறப்பனை, ஊர்வன போன்றோ படைக்காமல், அரிதிலும் அரிதான மனிதப் பிறவியைத் தந்த இறைவனுக்கு நன்றியுள்ள மனிதன் செலுத்தும் காணிக்கை தான் என்ன?
- தானும் இனிதே வாழ்ந்து -
- தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்கும் செய்து