பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. நுழைவாயில்

கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை இறைவன் நமக்குக் கருணையோடு அளித்துள்ளான்.

அதிலும் -

கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளின்றி முழுமனிதனாகப் படைத்திருக்கிறான்.

புல், பூண்டுகளாகவோ -
மரம் செடி, கொடிகளாகவோ,
விலங்கினங்களாகவோ

பறப்பனை, ஊர்வன போன்றோ படைக்காமல், அரிதிலும் அரிதான மனிதப் பிறவியைத் தந்த இறைவனுக்கு நன்றியுள்ள மனிதன் செலுத்தும் காணிக்கை தான் என்ன?

தானும் இனிதே வாழ்ந்து -
தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்கும் செய்து