பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


இங்கே முன்னுள் அமைச்சர் ஆர். வேங்கட ராமன் இருக்கிறார், சேலம் இரும்பைப் பற்றி அவருஞ் சொல்லுவார். ஆனால், வருத்தத்தோடு சொல்வார். நாங்கள் இந்தச் சேலம் இரும்பைக் குறித்து ஆராய்ந்து அனுப்பினோம். சேலத்துக்கு ஓர் உருக்காலையை வழங்க அவர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பது பற்றி உங்கள் கருத்தைக் கூறுமாறு நான் கேட்கமாட்டேன். ஏனெனில் அது, அரசியல், உங்களுக்கானதல்ல. தொழில் உற்பத்தியில் ஈடுபாடுடைய நீங்கள் சேலம் இரும்பைப் பற்றிய எங்களது அறிக்கையை ஆராய்ந்து நல்லது கெட்டதை அதன் தொழில்-அறிவியல் பலன்களைத் தயங்காது விருப்பு வெறுப்புக்கிடமளிக்காது சொல்லுங்கள். இதுவே என் வேண்டுகோள்.

வகைப்பாடு : கல்வி-தொழிற் கண்காட்சி.
21-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலகத் தொழில் வணிகக் கண்காட்சித் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.
23. காட்டுக்கு கலந்தரும் பெண் கல்வி

காலஞ்சென்ற பெரியார் எத்திராஜ் அவர்களின் திருவுருவப் படத்தை இந்த மண்டபத்தில் திறந்து வைப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் திரட்டிய பெருஞ்செல்வத்தை மகளிர்