99
தஞ்சை விளங்கிடும் என்று அவரிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அவரும் உறுதுணையாக இருந்து நமது நோக்கங்கள் நிறைவேறப் பேராதரவு தந்தார்.
இப்போது இங்கே 5 இலட்சம் செலவில் இந்த நிலையம் அமைக்கப்படுகிறது. இத்தகைய நிலையங்கள் நிரம்ப ஏற்படவேண்டும். இதுவரை நம்மிடமுள்ள மீன் வளத்தில் 100-க்கு ஒரு பங்கைக்கூட நாம் பயன்படுத்தவில்லை.
நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, " உங்கள் நாட்டுக் கடற்கரை அருகேகூட நாங்கள் மீன் பிடிக் வருகிறோம்.” என்று அவர்கள் சொன்னார்கள்.
முப்புறமும் கடல், கடல் எல்லாம் அலை. அலையெல்லாம் எண்ணிய மீன்வளம் உள்ளது. இதைத் தக்க முறையில் பயன்படுத்தினால் உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க நாம் வழி காணலாம்.
மீன் வளத்தைப் பெருக்குவதில் நாம் புதிய கட்டத்தை அடைந்துள்ளோம். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் தேவை. கப்பலைச் செலுத்த, வானெலி, தொலைபேசி முதலிய கருவிகளே இயக்கத் தேர்ந்தவர்கள வேண்டும்.