பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


தவிர்ப்பதைக் காட்டிலும், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில மணி நேரங்கள் வந்திருந்து செல்வதால் உடல் நலம் பெறுவதாகவே நான் உணருகிறேன்.

விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோரையும் இவற்றில் பங்கேற்றோரையும் நான் பாராட்டுகிறேன். விளையாட்டுப் பந்தயங்களில் போலீஸ் படையினர் இத்தனை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக உள்ளது.

இந்நேரத்தில் நான் ஒரு கருத்தேற்றத்தைக் கூறலாமென்று நினைக்கிறேன். போலீஸ் படையினருக்கென்று ஏற்கனவே உள்ள விதிமுறைகளோடு மற்றோரு விதிமுறையைச் சேர்த்துக் கொள்ளுமாறு நான் ஐ. ஜி. அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் சேர்த்துப் போலீஸ் படையினரிடையே நாடகக் கலைப்போட்டி நடத்தி, அவர்களில் நடிப்பு - கலைத்தேர்ச்சி உள்ளவர்கள் எவெரெவர் என்று நாம் அறியலாம். போலீஸ் படையில் இந்தத் திறமை படைத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன.

எந்தச் சமுதாயத்திலிருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக்கண்ணாடிகளாக அப்படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பதில்லை. போலீஸ்படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதே போலப்