பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


காரணமென்பதை மற்றாரும் அறிவர். நாடகக்கலை தமிழ்நாட்டில் இந்த அளவாவது முக்கியத்துவம் பெறச் செய்தது திராவிட இயக்கத்தாருடைய பணி என்றுதான் சொல்ல வேண்டும். அதனை அவர்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தங்கள் கொள்கைகளை எடுத்துக்காட்டுவதற்கு நாடகமும் ஒரு சிறந்த சாதனமென்பதைஉணர்த்திய பெருமை, அதன்மூலம் அதிகமான மக்களிடம் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பெருமை அவர்களுக்குரியதாகும் என்று அண்மையில் ஒர் ஏடு தீட்டியிருக்கிறது. ஏட்டின் பெயர் சோவியலிஸ்டு. உண்மைதான் !

சீன் ஜோடனையையும், வேட்டுமுழக்கங்களேயும் வெள்ளிச் சாமான்களையும் நம்பாமல், நடிப்பையும் கருத்தையும் முதலீடாக வைத்து, நாம் நாடகக் கலைக்குப் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், நமது நாடகங்கள் மணமுள்ள மலர்களாக இருக்கின்றன. இந்துவின் ஆதரவும், கல்கியின் படவிளக்கமும் விகடன் விமர்சனமும், மந்திரிகளின் ஒத்துழைப்பும் சச்சிவோத்தமர்களின் ஆதரவுமிருந்தும், அந்த வட்டாரத்து நாடகங்கள் மணம்வீசவில்லை. காரணம் அவைகள் காகிதப் பூக்கள். நம்முடையவை கொள்கை மணம் கொண்ட ரோஜா மலர்கள்.

நாம் நாடகம் நடத்துவதை ஓர் அடிப்படையான கொள்கைக்கு ஆக்கம் தேடவே செய்கிறோம். உண்மை இது. மறுக்கவில்லை, மறைக்கவுமில்லை. அதனால்தான், நமது நாடகங்களிலே, நமது கொள்கைகள் கோலோச்சுகின்றன. இதனைக் கூடாது