பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள் 1 வழக்கமாகத் தமிழில் பேசும் நான், அறக்குழுத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கிலத்தில் பேசுகிறேன். கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள் தமிழில் பேசிய பிறகுதான், நான் பேசுகிறேன். எனவே, தமிழுக்கு முதலிடம் தந்த பிறகு, ஆங்கிலத்திற்கு இடமளிக்கிறேன். இங்கே மாணவர்கள் பரிசு வாங்கிச் சென்றதைப் பார்க்கும்பொழுது, நான் படித்தபொழுது பரிசு வாங்கிய காட்சிகள் என் நினைவுக்கு வந்தன. காஞ்சிபுரம் பச்சையப்பரின் அறநிலையப் பணி, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து எல்லாருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அந்தத் தூய பணி, சமுதாயம் முழுவதுக்கும் நன்மை பயப்பதாக அமைந்துள்ளது. - இப்பொழுதுள்ள மாணவர்களின் மனோபாவம் பழைய மாணவர்களின் மனோபாவம் போல இல்லை என்று சொல்லப்படுகிறது. இன்று நேற்றாக இருக்க முடியாது. எனவே, இப்போதுள்ள மாணவர்கள் பழைய மாணவர்களாக இருக்கமுடியாது. எப்படி ஒப்பிட்டுப் பார்த்தாலும், நம்முடைய மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களைவிடச் சிறந்தவர்கள்.