பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47-

பொறுத்து இவை அமைய இருக்கின்றன. மொழி பெயர்க்கும் பொழுது கருத்துக்களைத் திரட்டித் தர வேண்டும். அப்படியே மொழி பெயர்த்த ல் இது தானு தமிழ் ?” என்னும் கசப்பு ஏற்படும்.
நூல்கள் ஏற்பட நிரம்பப் பொருளாதாரம் தேவை. அதற்கு இந்தியப் பேரரசு உதவி செய்ய உறுதியளித்திருப்பாகக் கல்வியமைச்சர் கூறினுலும், அதற்கும் த மி ழ க அர சு துணை நின்ருலும் அது மட்டும் போதாது. கருத்தாழமிக்க நூல்கள் வளரப் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். புத்தகம் வாங்குகிற பழக்கம் வேண்டும். வாங்குகிற பழக்கம் என்ருல் இரவல் வாங்கிப் படிப்பதை தான் சொல்ல வில்லை. அது நிரம்ப இருக்கிறது. புத்தகம் வாங்கு கின்ற பழக்கம் வளர்ந்தால்தான் புதிய புதிய புத்தகங்கள் வெளிவரும்.
தப்பித் தவறி ஒருவர் எழுத ஆரம்பித்தால், ஆறு மாதத்திற்கு ஒரு வீடு பார்க்கவேண்டியது தான், ஏனென்ருல் பழையபாக்கிக்காரன் தேடு வான். ஓராண்டுக்கு ஓர் அச்சகக்காரர் துணை நிற்க வேண்டும். இங்கே அதிகமாக விற்பனையாபவை அந்தந்த ஆண்டு பஞ்சாங்கமும், இரயில்வே கைடுந் தான். மற்றவை அதிகமாக விற்பதில்லை. ஆதாயம் இல்லை என்று சோர்வு அடைந்து விடுகிருச்கள்,
நம்முடைய ஆசிரியர்களுக்கு நல்ல கற்பனைத் திறன் உண்டு. அவர்களுக்குச் சிந்தனை, துணை ஏடாக இருக்கவேண்டும்.