பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இத்தகைய பணியைச் செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை தாங்கிப் பணியாற்றுவதற்கு, முழுத்திறமை பெற்றவர் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரேயாவார் என் பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு நல்ல செயலில்,குழு அமைத்துப் பணியாற்றுஞ் செயலில், நண்பர் மகாலிங்கமும், குன்றக்குடி அடிகளாரும் ஈடுபடுவது நல்ல பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு - நல்லறிஞர்கள். 20-9-67 அன்று சென்னையில் நடந்த பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் மணிவிழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை. 17. கொடிய மதுவை ஒழிப்போம் 1. மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது. காலங்கால மாக நாம் குடிப்பழக்கத்தை ஒரு தீமையாகவே கருதி வந்திருக்கிருேமே தவிரச் சிக்கலாக மட்டும் எண்ணி யதில்லை.