பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


எப்போதுமே அண்ணன் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், தம்பி மிக அக்கறையாயிருந்து காரியமாற்றுவான். அதுபோல முதல் மாநாட்டை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இம்மாநாடு அதன் தொடர்ச்சியே தவிரப் புதிது அல்ல.

அந்த மாநாட்டிற்கு 20 நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர். இப்போது நடக்கும் மாநாட்டிற்கு உருசியா போன்ற 30 நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்திருக்கின்றனர். இந்த நாடுகளுக்கெல்லாம் தமிழ் மொழி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் அது சரிவர அறிமுகமாகவில்லை.

தமிழ் மொழியின் அருமையினை உருசிய நாட்டினரும், செக்கோஸ்லாவிய நாட்டினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், இங்கே அது சரிவர உணரப் படுவதில்லை. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராயப்படுகிறது என்று அறியும் நேரத்தில், அத்தகைய தமிழுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்கிற போது நமது நினைவு எங்கோ செல்கிறது. ஆனால் நாம் இன்றுள்ள நிலையை நினைக்கும் போது, இன்றிருக்கும் நிலைக்கு நமது நினைவு வருகிறது.

எங்கோ நம் நினைவு செல்கிறது என்று கூறினேனே அந்தத் திருவிடத்திற்கு நாம் உறுதியாகச் செல்வோம் எப்போதும் தமிழர்கள் தமது தமிழ் பண்டிாட்டைப் போற்றித் தமது வரலற்றை உணர்ந்து தமது ஆற்றலை அறிந்து ஒன்று பட்டுப் பணியாற்றி அந்த இடத்தைத் திண்ணமாக அடையலாம்.