பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தே மாரி! மாரி, (வேலைக்கார மாரி வருகிறாள்) மாரி! போய் சுசீலாவை அழைத்துக்கொண்டுவா. பூந்தோட்டத்தில் தான் இருப்பாள். அப்பா கோபமாக இருக்கிறார் என்று சொல். ஜெ: ரொம்ப அவசரம் என்று சொல். போ, போ. [மாரி போகிறாள்.] தே: ஜெகவீரரே! நான் வாலிபப் பருவ முதலே கொஞ்சம் சீர்திருத்தக் கருத்துடையவன் என்பது உங்களுக்கே தெரியும். ஜெ: ஆமாம், ஆமாம், அதனாலேதானே விதவை சொர்ணத் தைக் காதலித்தீர். தே: (சோகத்துடன்) தயவுசெய்து அவளைப்பற்றிப் பேச' வேண்டாம். என் வேதனையை அதிகப்படுத்த வேண்டாம். ஜெக வீரரே! என் மகள் சுசீலாவை நான் அடுப்பூதும் பெண்ணாக்க வில்லை. படிக்க வைத்தேன். சுசீலா கர்நாடகமல்ல; புதுயுகப் பெண்ணாகிவிட்டாள். அவளுக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் விசேஷ அக்கரை. ஜெ: இருக்கட்டுமே, அதற்கென்ன, ஒரு லேடீஸ் கிளப் ஆரம்பித்து சுசீலாவை பிரசிடெண்ட் ஆக்கிவிடுகிறேன். டென்னிஸ் ஆடட்டும் கிளப்பில் தே: அந்த ஆடம்பரமல்ல அவள் விரும்புவது. ஆடவர் பெண்களைக் கொடுமை செய்வது கண்டால் எப்படிச் சீறுகிறாள் தெரியுமா? அப்படிப்பட்டவளை நான், எப்படி வற்புறுத்துவது உம்மைக் கலியாணம் செய்து கொண்டாக வேண்டுமென்று. ஜெ: இதைச் சொல்லத்தான் இவ்வளவு முன்னுரையா? தேவரே! வாதங்கள் பயன்படாது. சுசீலாவை நான் அடைந்தே ஆகவேண்டும். தே: எனக்குத் துளியும் பிரியமில்லை. எப்படியப்பா, நான் சுகமாக வாழ்க்கை நடத்தமுடியும், இஷ்டமில்லாத கலியாணம் செய்துகொண்டு. சிறுகுழந்தைகள் கூடத் தங்களுக்குப் பிடிக்காத பண்டத்தை ஊட்டினால் துப்பிவிடுமே; என்றெல்லாம் சுசீலா கேட்பாளே! ஜெகவீரரே! உமது கண்களிலே கோபாக்னி கிளம்பி என்னை மிரட்டுகிறது. இதற்குப் பயந்து நான் சுசீலாவை வற்புறுத்தினால், அவள் கண்களிலே நீர் வழியுமே, அது தீயை விடச் சுடுமே, நான் என்ன செய்வேன்? ஜெ: நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன என்று நீர் சும்மா இருந்துவிடும். (மீசையை முறுக்கிக் கொண்டு) நான் கவனித்துக்

14

14