பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தே: பிரமை! ஆமாம்! (தனிமொழி) ஆனால்...குரல், அதே குரல்...சொர்ணமா? இருக்க முடியுமா? (எதிர்புறமிருந்து சொர்ணம் ஓடி வருகிறாள். இரு வரும், ஓடித் தழுவிக்கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.] தே: (அடிமூச்சுக் குரலில்) சொர்ணம்? நான்...... சொ: இன்பக் கன்வல்ல! உண்மைதான்! நீங்கள் இங்கே எப்படி? தே: மிட்டாதாரரிடம் ஒரு. வேலையாக... நீ ? சொ: நானும் அவருடைய வேலையாள்தான்..... (தேவர் சொர்ணத்துடைய ஆடை அலங்காரங்களைப் பார்க்க) வேலை செய்பவளுக்கு, இப்படி அலங்காரம் இராதே என்று பார்க்கிறீரா? நான் மிட்டாதாரரின் அபிமான ஸ்திரி! தே: அபிமான ஸ்திரி! சொ: (தலையை ஆட்டி) ஆமாம்! மானம் இழந்த பிறகு அந்தப் பட்டம் தரப்படுகிறது. மாளிகையிலே குடி ஏறினால். பழைய மண் குடிசையாகவே இருந்தால், அபிமான ஸ்திரி என்ற பெயர் இராது. வேறு பலவிதமான பெயர்...(பெருமூச்சு.) தே: (சொர்ணத்தை மறுபடி ஒரு கணம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ஆவேசம் கொண்டவர் போல) சொர்ணம்! சொ : இல்லை! சொர்ணம் செத்துவிட்டாள். உம்முடன் சோலையிலே விளையாடிய சொர்ணம் செத்துவிட்டாள். விதவை மாண்டுபோனாள். நான் ஸ்வர்ணா! மிட்டர்தாரரின் வைப்பாட்டி. கருணாகரத் தேவரின் மனைவியாக இருக்கவேண்டியவள் இன்று இந்த நிலையில்... [தேவர் முகத்திலறைந்துகொண்டு தே: சொர்ணம்! இந்தப் பாவியை மன்னித்து விடு. மாசற்ற உனக்கு நான் துரோகம் செய்தேன். மகா பாதகன் நான். சொ: அதற்குப் பரிசாகப் பகவான் உம்மை ஜெமீன் வீட்டு மருமகனாக்கினார். எனக்கும்தான், (மாளிகையைக் காட்டி) இந்த அந்தஸ்தை (தன் அலங்காரத்தைக் காட்டி) இந்த அலங்காரத்தைத் தந்தார்.

41

41