பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொ: (தோட்டக்காரனைப் பார்த்து) அப்பா? உனக்குக் கோடி புண்யம். இந்தப் பாவியால் நான் விபசாரியானேன்- கொஞ்ச நேரத்துக்கு முன்பு பஞ்சணையில் இருந்தேன் - அங்கு வந்து கெடுத்ததும் இந்தப் பாதகன்தான். நீ யாரோ, பாவம், நீ காட்டும் இரக்கத்திலே ஆயிரத்திலே ஒரு பங்குகூட இவனிடம் இல்லை. தோ: (கேலியும் சோகமும் நிறைந்த குரலில்) எப்படியம்மா இருக்கும்! அதான் நிறையப் பணம் இருக்கு என்கிறானே! இரும்புப் பெட்டிக்கும் இருதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கிறது இல்லை அம்மா. சொ: அப்பா! நீ குல தெய்வம்போலக் குறுக்கிட்டாய். நான் இனிக் கூலி வேலை செய்தாவது பிழைக்கிறேன். எனக் காகப் பரிந்துபேச உலகிலே ஒருவராவது முன் வந்தார்களே, அதுவே போதும். இவன் ஒழியட்டும், விட்டுவிடு தோட்: அடடே! அது நடக்கிற காரியமா? பெரிய ஜெமீன் வீடு என்றாரே, அந்த இடத்து யோக்யதை, இலட்சணம், ஊரா ருக்குக் கொஞ்சம் தெரியணுமில்லே! நம்ம வீட்டுக்கு வாங்க. ஐயாவும் வருவாரு. இருந்து யோசனை செய்து பார்க்கட்டும். தே: நான் வர முடியாது. ஏழை தோ: ஏன்! நடக்க முடியலையோ? ஐயாவைத் தூக்கி கிட்டுப் போகணும் போலிருக்கு. வாங்கய்யா, வாங்க. முதுகிலே ஏறிச் சவாரி செய்து செய்து, பரம்பரைப் பரம்பரையாப் பழக்கப்பட்டுப் போச்சி ! ஆனா இப்போ குதிரைகளெல்லாம் கொஞ்சம் இடக்கு செய்யுது. ஜாக்கிரதையா இருக்கணும் நட, நட, வகையாத்தான் வந்து மாட்டிக்கிட்டயே, ஏங்கிட்ட; விடுவேனா சும்மா ! அதுவும் ஏழை, நானும் ஏழை ஜாதி, எப்படி அதை நடு ரோடிலே தேம்பத் தேம்ப விட்டு விட்டுப் போக முடியும். [தேவரைப் பிடித்திழுக்க அவர் போகாமல் நின்று திமிருகிறார். சொர்ணம் தோட்டக்காரன் கையைத் தொட்டு சொ: வேண்டாம், விட்டுவிடப்பா! போகட்டும். தோ: திருடன் பிடிபட்டா, யாரு வீட்டிலே களவாடினானோ அவனே வந்து விட்டுவிடச் சொன்னாக்கூட போலீசார் விட மாட்டாங்க திருடனை. இந்தமாதிரி ஆசாமிகளைக் கண்டா நான் விடற வழக்கமே கிடையாதும்மா. நீ சும்மா இரு, வருவாரு.

50

50