பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே: செயினா ! ஏது இது? வா: (போலி தைரியத்துடன்) ஏன் என்னுடையதுதான்! (வேதம் அதைக் கையில் வாங்கிப் பார்த்து ஆச்சரியத்துடன்] வே: (கொஞ்சம் அலட்சியமாக) உன்னுடையதா? ஏன். இதை எடுத்துக்கொண்டு வந்தே. பணம் இல்லையா? வா: (அசடு வழிய ) இல்லை! பணத்துக்குப் பதில் இதை வைத்துக்கொள். பத்து நாளைக்கு நான் இங்கேயே தங்கி இருக்கப்போகிறேன். இது 5 சவரன். செலவுக்கு இது போதாதா? வே: (மிரட்டும் குரலில்) நிஜத்தைச் சொல்லு, இதை எங்கிருந்து திருடினே? வா: (பயமும் வெட்கமும் அடைந்து) திருடுவதா? என் நகையை நான் ஏன் திருடப்போகிறேன்! வே: (மிரட்டி) நிஜத்தைச் சொல்லு. வா : சத்தியமா, இது எங்க வீட்டுதுதான். வே: உங்க அம்மாவுதா? இல்லை. உன் சம்சாரத்துதா? ஆமாம், இருந்தா என்ன? இரு, இதோ வர்ரேன். வெத்திலைப் போட்டுக்கோ. [வேதம் வாசற்படி சென்று ஆறுமுகத்தைக் கண்டு, வே: பார்த்தாயா இந்த வேடிக்கையை அந்தப் பயல் இதை வீட்டிலே இருந்து அடித்துக்கொண்டு வந்திருக்கான். அட, செயின் ! வேறே எங்கேயாவது களவாடி இருப் வா : வே: வா : வே: பானோ? வே: இல்லை, சுத்த அசட்டுப் பயலா இருக்கறான். முழி முழின்னு முழிக்கிறான். ஆமா,இப்ப என்ன செய்யறது? பாவம், அவன் சம்சாரத்துதாம் செயின். அவ சபிச்சுக் கொட்டுவா ஆ: சரிதான் போடி சாபம் வந்து உன்னைச் சர்ப்பமாகக் கடிக்கப் போவுதா? பத்து. நாளைக்குச் சனீஸ்வரன் கோவிலுக்கு விளக்கு ஏத்தினாப் போவுது, சாபமெல்லாம்.

88.

88