பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


பாரதியின் பாட்டும் ஒரு பாட்டா? என்று எத்தனை புலவர்கள் பரிகசித்தனர் பாரதியின் பாட்டை, ஆரம்பத்தில், ஆனால்......?

🞸🞸🞸

பயன், வெள்ளையனை விரட்டிட, மக்களிடையே வீராவேச உணர்ச்சியைத் தட்டி எழுப்பின பாரதியின் பாடல்கள், அந்தக் காலத்தில்.

🞸🞸🞸

மக்களிடையே எத்தகைய மனமாற்றமும், எண்ணத்தெளிவும், கருத்துக்களும் பரவிட--எளிதில் பரவிட, மொழி முதற் கருவியாக விளங்குகிறது.

🞸🞸🞸

மொழி வழியேதான் எத்தகைய கருத்துக்களும். பரவுகின்றன; பரப்பப்படுகின்றன, முதலில்.

🞸🞸🞸

அதிகாரத்தில் அமர்வதால் அகமகிழ்வோ அல்லது அழுக்காறோ அடைபவர்கள் அல்லர் நாம்.

🞸🞸🞸

இப்போது வேலையதிகம் எங்களுக்கு; வீணர்களாய்த் திரிவதற்கல்ல; வாய்ச்சொல் வீரர்களாய் விளங்கவுமல்ல; வன்மையுண்டு வகையான திட்டங்களை வகுத்துக் காட்ட; முயற்சியுண்டு முக்கிய இலட்சியங்-