பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


பொருட்படுத்திட வேண்டாம். துணிவுடன் காரிய மாற்றுங்கள். வெற்றி நிச்சயம் கிடைத்தே தீரும் என்பது உறுதி, மிகமிக உறுதி!

🞸🞸🞸

தமிழில் தலைசிறந்த கருத்துக்கள் யாவும் தரப்பட வேண்டும். தமிழில் தன்மானக் கருத்துக்கள், மனிதாபிமான எண்ணங்கள் கொண்ட ஏடுகள் எழுதப்பட்டு மக்களிடையே மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும்.

🞸🞸🞸

இன்றையத் தமிழ்மொழிப் புலமை படைத்தோர், தமிழ்வாணர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள் தரங் கெட்டுவிடும் என்று, பழமை விரும்பிகளாகவே விளங்கி வராது, மறுமலர்ச்சி நூல்களை இயற்றித் தர வேண்டுகிறேன்.

🞸🞸🞸

மகேஸ்வரன் புகழ்பாடி, மதத்தை நம்பி, மதிகெட்ட மனிதனாக வாழவிடும் மத இலக்கியங்கள் தேவையே இல்லை. குலத்துக்கொரு நீதி வகுத்து, மனிதனது சுயமரியாதையைப் போக்கிடும் புராணங்கள், இலக்கிய வரிசையிலே, இருத்தல் கூடவே கூடாது!

🞸🞸🞸

"குலத்துக்கொரு நீதி" ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொருவித, தனித்தனித் தன்மையுள்ள தராதரமுள்ள, பாரபட்சமான, நீதியைப் பகவான் லீலையென்றும், ஆண்டவனின் திருவிளையாடல்கள் என்றும் போற்றிப் புகழும் நிலையிலுள்ள இத்தகைய ஏடுகள்-