பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


இலக்கியங்கள், எந்த முறையில் அமைகின்றனவோ, இலக்கியங்கள் எந்த முறையைப் போதிக் கின்றனவோ, எந்தெந்த ஏற்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றனவோ, அந்தந்த முறைகளிலே, ஏற்பாடுகளிலே மனிதனது எண்ணமும் செயலும் செல்லுகிறது.

🞸🞸🞸

பழைய இலக்கியங்கள், பழைய காலத்திற்கேற்றவைகளாக, சிறந்தவைகளாக இருக்கலாம்? ஆனால் அதே கருத்துக்கள், அந்தக் கால கருத்துக்கள், அப்படியே முழுதும், இன்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுவது, திட்டம் வகுப்பது, தீர்மானங்கள் செய்வது தகுதிதானா, தேவைதானா? கூறுங்கள்!

🞸🞸🞸

பழைய இலக்கியங்களிலே, காவிய ரசம் ததும்பலாம்; நடையழகு நன்றாக இருக்கலாம்; அதைத் தீட்டியவர் பெரியபுலவராகவும் இருக்கலாம்! அதற்காக அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கதைகள், நீதி போதனைகள் அத்தனையும் தேவை, தீர்மானமானவை, என்றும் மாற்ற முடியாதவை, மாற்றக் கூடாதவை, என்று கூறுவதை எப்படி ஒப்பமுடியும், முழுதும்!

🞸🞸🞸

எந்த இலக்கியமானாலும் அதன் கருத்தை, அது தரும் பாடத்தை, போதனையை, நல்லறிவைப் பொறுத்துத்தான் அதன் சிறப்பு, அதனது தேவை அமையும்; அமைந்திடவும் முடியும்!

🞸🞸🞸