22
யற்றதா, பழமைக்கு விரோதமா, எந்தவிதத்திலே தவறு? எடுத்துக் காட்டுங்கள்!
🞸🞸🞸
காலத்திற்கேற்ற கருத்துக்களைப் பரப்பி கண்மூடிப் பழக்க வழக்கங்களை நீக்கி, மனித முன்னேற்றத்தை முன்னேற்ற எண்ணங்களை, எழுச்சியை, அறிவை, ஆராய்ச்சியைத் தடுத்திடும் விதி, குலத்துக்கொரு நீதி; மேலுலக வாழ்வு என்ற கருத்துக்களை மனித உள்ளத்திலிருந்து நீக்கி, மேலும் பரவாது தடுத்து, மனிதனைத் தன்னம்பிக்கையுடையவனாக,எதையும் அலசிப் பார்த்திடும் அறிவு படைத்தவனாக தனது ஊக்கத்திலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டவனாக, உருவாக்க வேண்டும்.
🞸🞸🞸
விதி--குலத்துக்கொருநீதி--மேலுலக வாழ்வு என்ற பழமைக் கருத்துக்களைத் தடுத்து, புதுமை. எண்ணங்களை, அறிவுக் கொள்கைகளை, ஆராய்ச்சித் திறனை, விஞ்ஞானக் கருத்தை மக்கள் எண்ணத்தில் எழுப்ப வேண்டும். இதற்கு இலக்கியங்களும், ஏடுகளும் மிகச் சிறந்த கருவியாகும்; சாதனமுமாகும்.
🞸🞸🞸
புத்தகங்கள் மூலம் பழங் கருத்துக்களை, பாசிபடிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துக்களை புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும். எளிதில்!
🞸🞸🞸
சாதாரண மக்கள். பாமர மக்கள் தெளிவு பெறும் வழியிலே, இலக்கியங்களை இயற்றுங்கள்.
🞸🞸🞸