பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


கண்ணைப் பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள், இங்கு மட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கெடும் என்பதைக் கண்டேம். நாங்கள் பெரிய புராணத்தைக் கண்டிக்கிறோம்.

🞸🞸🞸

புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே நாங்கள். அப்புராணங்களைக் கண்டிக்கிறோம்.

🞸🞸🞸

பண்டிதர்கள் எங்களைப் பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகைமூட்டி இராமன் மரத்தின் மறைவிலிருந்து வாலி மீது அம்பு எய்தது போலச் செய்ய, ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்புகிறேன்.

🞸🞸🞸

நூற்றுக்கு 96 பேர் தற்குறிகளாக உள்ள நாட்டிலே பிற இனத்தின் உயர்வுக்கும் ஆதிக்கத்துக்கும் பயன்படும் ஏடுகள் மனதில் பதியும்படி செய்வது முறையாகுமா? அங்ஙனம் பிற இனத்தின் கலையிலே ஊறும் மனம், இன எழுச்சிபெற முடியுமா? இன மானம் கோரவோ, தனியரசு பெறவோ முடியுமா என்பதை யோசிக்க வேண்டுகிறேன்.

🞸🞸🞸

தமிழனின் தனியான நெறியிலே, அவதாரங்கள் எடுக்கும் ஆண்டவன் கிடையாது.

🞸🞸🞸