பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால் தான் மக்களுக்குப் பழமையினிடத்திலுள்ள பாசம் குறையும்; மனத்திலுள்ள மாசு நீங்கும்; காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும். அப்பொழுது மக்கள் உணவுப் பஞ்சத்தால் மடியும் பொழுது சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது. மழையைப் பற்றி ஆராய்ச்சி நடக்கும். சொற்பக் காலத்தில் விளையக் கூடிய பயிர்களைப்பற்றி ஆராய்ச்சி நடக்கும்.

🞸🞸🞸

நாடு நிலை உயர்ந்திருந்தும், நினைப்பு உயராததற்குக் காரணம், மூட நம்பிக்கை--நினைப்புநிலை உயர்ந்த அளவுக்கு உயர்வதற்கு ஒரே மார்க்கம். பகுத்தறிவைப் பரப்பவேண்டும். பாடத்திட்டத்திலே நான் முன்பு கூறியது போல, பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான ஒரு திட்டம் வகுக்கப்படாத வரையில், பகுத்தறிவும் பரவாது; நமது நினைப்பும் உயராது.

🞸🞸🞸

பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்க முடியுமே தவிர, வேறு எந்த மருந்தாலும் போக்க முடியாது.

🞸🞸🞸

பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது.

🞸🞸🞸

பணம். கோயில்களிலே நகையாய் வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்கு வாதம் தீர்ந்தால்தான் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம்.

🞸🞸🞸