பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை


தமிழுக்காகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த உழைப்புக்கள் கணக்கிலடங்காதவை. அறிஞர் அண்ணா அவர்கள் தமது பெரிய எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் சேவை செய்துள்ளார்கள். அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் அடங்கியுள்ள பொன்மொழிகளில் சிலவற்றைச் சிறப்பான முறையில் ஆசிரியர் மறைமலையான் தொகுத்துத் தந்திருக்கிறார். தமிழ்மக்கள் இந்நூலினைப் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறோம்.


—பதிப்பாளர்.