பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தையின் கேள்வி


அன்பையும்--அன்னத்தையும் ஒன்றாகக் கலந்து வானத்திலுள்ள நிலவையும் காட்டிக் குழந்தைகளுக்குத் தாய் சோறிடும் போது, குழந்தையும் நிலவைப் பார்க்கிறது. ஏதேதோ எண்ணத்தான் செய்கிறது; ஏதேதோ கேள்விகளைக் கேட்கிறது.

'யாரம்மா இவ்வளவு அழகான விளக்கை அவ்வளவு உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த ஒரு விளக்கைச் சுற்றி ஏனம்மா அவ்வளவு சிறுசிறு விளக்குகள் உள்ளன?' என்று கேட்கிறது.

அம்மா அந்தச் சந்திரனைப் பிடித்துத்தா; நான் பந்தாட வேண்டும் என்று கேட்கிறது இன்னொரு குழந்தை. நிலவையும் பார்த்து விட்டுத் தன் அன்னையின் திருமுகத்தையும் பார்த்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறது இன்னோர் குழந்தை

🞸🞸🞸

குழந்தை உள்ளத்திற் குமுறி எழும் எண்ணங்கள் வேடிக்கையானவை--ஆனால் முடிவுகள் அல்ல; ஆசை அலைகள் அவை. மனித சமுதாயத்தில் குழந்தைப் பருவத்திலேயும் இதே போலத்தான் ஒவ்வொரு நிழ்ச்சிக்கும், இயற்கைக் காட்சிக்கும் ஏதோ ஒரு வகையான காரணம் தேடி அலைந்து, பலப்பல விசித்திரமான காரணங்களை, விளக்கங்களை மனித சமுதாயம் எண்ணிற்று--பேசிற்று--நம்பலாயிற்று.

🞸🞸🞸

மனித சமுதாயத்தில் பாலப் பருவத்தில் கிடைத்த பல உண்மைகள், இன்று உண்மைகள் என்று உலகினரால் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை.

🞸🞸🞸