பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மாவை ஐப்பானியர் பிடித்தபோது, அவர்கள் வெளியிட்ட நோட்டுகள் எப்படி இன்று பர்மாவில் செல்லுபடியாகாதோ, அது போலச் செல்லுபடியாகாத நோட்டுகளைச் சேகரித்து வைத்துச் சிறுபிள்ளைகள் விளையாடினால், கேடு அதிகம் இல்லை; அந்த நோட்டுகள் செல்லுபடியாக வேண்டும் என்று வாதாடினால். நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொல்லை. அதுபோல் மனித சமுதாயத்தின் சிறுபிள்ளைப் பருவ எண்ணங்களை -- ஏற்பாடுகளை --தத்துவங்களை--விளக்கங்களை இன்னும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய கேடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

🞸🞸🞸

விதியின் விளையாட்டு


எதிர்பார்ப்பதற்கு நேர்மாறான நிகழ்ச்சிகளைக் காணும்போது, சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் துவக்கப்பட்ட காரியம், நல்ல முயற்சிக்குப் பிறகும் முறிகிறபோது, போட்ட கணக்குப் பொய்யாகும். போது, விதைத்து முளைக்காதபோது, நண்பர்களிட மிருந்து பகை கிளம்பும்போது, ஓவியம் தீட்டுகையில், வண்ணக்கலயம் உடையும்போது, வீணையை மீட்டும் போது நரம்பு அறுந்து, அறுந்த நரம்பு வேகமாகக் கண்ணில் பாயும்போது, இவை போன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள் - மனதைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நேரிடும் போது, மனம் ஒடியுமோ என்று மருளும்போது, ஏதேனும் ஒரு வகை ஆறுதல் தேவைப்படுகிறது. அப்போது விதியெனும் தத்துவம் வெற்றிச் சிரிப்புடன் மக்கள் உள்ளத்திலே புகுந்து கொள்கிறது. குடிபுகுந்த பிறகு விதிதான் எஜமான். அந்த எண்ணத்துக்கு. இடமளித்தவன், பிறகு தெய்விக முலாம் பூசிவிட்டனர்