57
வேண்டும்? மூட நம்பிக்கையால் ஏற்படும் முட்டுக் கட்டைகள் என்னென்ன? எவையெவை? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துச் சிந்தித்து சிந்தனைத் தெளிவு பெற்று தெளிந்த வாழ்வு--திருப்தியான வாழ்வு மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் வாழ்வு. நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ வேண்டாமா. மக்கள்!
🞸🞸🞸
நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ்ந்திட மக்களைத் தயார் செய்திடுவதே இன்றைய பணி--முதற்பணி--முக்கியபணி--மக்கட்பணி!
🞸🞸🞸
மக்களிடையே மத மூட நம்பிக்கைகளைப் போக்கி சாதி, சமய பேதங்களையகற்றி, சமத்துவத்தையும், சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தி, அஞ்ஞானத்தை நீக்கி விஞ்ஞான உணர்வை ஊட்டித் தன்னம்பிக்கையையும். தளராத உழைப்பையும், ஊக்கத்தையும், உண்டாக்கித் தீரவேண்டும்!
🞸🞸🞸
மக்கள் வாழவேண்டும். உலகம் உருப்படவேண்டும். வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா! இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்கள் யாரையாவது காட்டமுடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.
🞸🞸🞸
புராணங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும், எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுள்களாகத்