பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுரிமை ஓங்க


சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் அக்கரை காட்டத்தான் செய்கிறார்கள்.

🞸🞸🞸

ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்து கொண்ட பின்னர்தானே திருமணம் நடைபெறவேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்; செய்கிறோம்.

🞸🞸🞸

பல பெண்களை ஓர் ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைந்தன! எத்தனை பெண்கள் கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத பயங்கர நிலையில் தத்தளித்தனர். எத்தனை குடும்பங்களில் கண்ணீர் வெள்ளம் புரண்டோடியது

🞸🞸🞸

பல மனைவியரை நான் மணப்பேன். என்னைத் தடுப்பவர் யார்? என்று ஆண்மகன் பேசிவந்த காலம் போய் விட்டது.

🞸🞸🞸

மணவாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலையில்