பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்க வேண்டும்.

🞸🞸🞸

கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, அல்லது மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தங்களுக்குள் பிடித்தமில்லாத போது, விவாகரத்துச் செய்து கொள்ளும் உரிமை பெற்றாக வேண்டும்.

🞸🞸🞸

விவாக ரத்துரிமை இருந்தால், பொறுத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக நடந்து விட்டாலும் பின்னர் அதனைத் திருத்திக்கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்த மற்றவர்கள், காலமெல்லாம் கூடி வாழ்வதென்பது நடவாத காரியந்தானே. எனவே, பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி விடுதலை பெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே?

🞸🞸🞸

விவாகரத்து உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப் பட்டுவிட்டால், கண்டபடி திரியும் கணவனை மனைவி, தட்டிக் கேட்டு, திருந்தாவிடின், விவாக விடுதலை பெற்றுக் கொள்ள முடியும். குடிகாரக் கணவனின் கொடுமைக்கு நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி, அவனிடமிருந்து விடுதலை பெற வழி பிறக்கும்.

🞸🞸🞸

ஒத்த கருத்தின்மை ஏற்படும்போது விலகி வாழ உரிமை பெறுவது, இருவருக்கும் நல்லதுதானே. இதனால் சமூகத்திற்கும் நன்மை உண்டு.

🞸🞸🞸