பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


சீர்திருத்தம், திருமணத்திலிருந்து துவங்குவது வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும். எனவே இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை.

🞸🞸🞸

கேவலமான பழக்கங்களையும். அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்த மற்ற சடங்குகளையும் விட்டொழித்தால் தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும்.

🞸🞸🞸

சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கி விட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய் விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்; மனதார வாழ்த்துகின்றேன்.