பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும்.

🞸🞸🞸

பொதுத்தன்மை பலமாக இருக்க வேண்டுமானால், தாபனம், மிக மிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்பட வேண்டும்.

🞸🞸🞸

அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய் `அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக் காமலிருக்கும்- ஆனால் சில காலத்துக்குத்தான் எப்போது மல்ல. தம்பியின் பழக்கமே அண்ணன் அறியா வண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகி விட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, எந்த விதமான பந்த பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனை யும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும். குடும்பம் பிளவுறும்; பிரியும். அண்ணன் தம்பிக்குள்ளாக ஒரு குடும்பத்திவேயே, இந்த நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்தாபனத்தில் மற்ற ஐக்கிய உறுப்பினருக்குமிடையே, கடைசி வரையில் பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையா தபடி பார்த்துக் கொள்ள முடியாது.

🞸🞸🞸

ஸ்தாபனம் ஏற்படச் செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்துக்கு, அதற்கான