பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


திறமை வாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படு வது போலச் சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப் படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்க திறனும்,உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை.

🞸🞸🞸

பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ்வளவு முக்கியமானதல்ல--அந்த ஜன்னல் இல்லா மற் போனாலும் மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப்படையும் குறுக்குச் சுவரும், மேல் அமைப்பும் சரியாக இருக்கு மட்டும், ஜன்னல் இருந்தாலும் எடுப் பட்டாலும், கெட்டாலும், மாளிகைக்கு ஒரு சேதமு மில்லை. ஆனாலும் மாளிகையிலே அக்கரை உள்ளவர்கள். அந்தச் சிறு ஜன்னலைக் கூடத்தான் கவனித்துக் கொள் வார்கள் கெடாதபடி. ஜன்னலை மட்டுமல்ல, அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும், கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டுக் கள்ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து அதன் விளைவாக மாளி கைக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்பட்டு விடக் கூடுமே. என்ற யூகம், மாளிகைக்காரருக்கு இருக்கும். எனவே, அவர் ஜன்னலின் கம்பி, மாளிகையின் அடிப்படை அல்ல என்ற போதிலும், அதனையும் தான் அக்கரையுடன் கவனித்துக் கொள்வார்; ஸ்தாபனங்களிலும் இது போலத்தான், தொழிற் ஸ்தாபனங்களின் ஐக்கியமும் பலமும் கெடாதிருக்க வேண்டுமானால், ஜன்னல் கம்பி யையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர் போல், ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும், கவனித்து, கட்டுக் கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

🞸🞸🞸