பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலிபர் முழு வாழ்வுபெற


சிற்பியிடம் கற்பாறை தரப்படுகிறது. அவன் வேலைக்கான மூலப் பொருள் --இனி அவனுக்குத் தேவை சிறிய உளியும், பெரிய உள்ளமும்; சுதந்தர இந்தியாவிலே, இதுபோலவே, வாலிபர்களுக்குப் பகுத்தறிவும். சுயமரியாதை உணர்ச்சியும் தேவை--புது வாழ்வு பெற--முழு வாழ்வு பெற.

🞸🞸🞸

வாலிபர்கள்,உரிமைப் போர்ப்படையில் ஈட்டி முனைகள். அவர்தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும் வாழ்க்கை எனும் பொய்கையிலே, விசாரம் என்னும் நஞ்சு கலக்கப்படாத பருவம்.

🞸🞸🞸

சந்தனக் காட்டைக்கடந்து மணமும் குளிர்ச்சியும் மருவி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல் அது போன்றது வாலிபம்.

🞸🞸🞸

மாயா வாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரன் வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம், ஆபத்துக்குப் பொருட்படுத்தாமல் அநீதி யைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு. வாலிபர்களிடையே மிகுந்திருக்கும்.

🞸🞸🞸

முடியுமா? காலம் சரியா? போதுமான பலம் இருக் கிறதா? நாளைவரை பொறுத்திருக்கக் கூடாதா?