பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 என்பன போன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா. வாலிபர்கள் நடமாடும் எஃகுக் கம்பிகள், அகத் திலே அருவிபோல் ஆர்வம், முகத்திலே வீரக்களை, செயலிலே துடிதுடிப்புக் காணப்படும். தலை குனிந்து நிற்பது பெருமூச்செறிவது, நம்மால் முடிகின்ற காரியமா என்று இழுத்துப் பேசுவது, ஆகிய முறைகள் அவர் களுக்குப் பிடிக்காதன. . அவர்கள் செயலாற்றும் வீரர்கள். உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள், அக்கிர மங்களை அழிக்க அனைத்தையும் அர்ப்பணித்த தியாகி கள், மக்கள் வாழ உழைத்த மாவீரர்கள், ஆகியோர் பற்றிய வரலாறு படித்தறிந்த அவர்கள் சிந்தனையிலே நம்மாலாவதென்ன பராபரமே, என்ற பஜனைப்போக்கு ஏற்பட முடியாதல்லவா? ஆகவேதான் வாலிபர்கள் விறு விறுப்புடன் காணப்படுகின்றனர். 添 என் நாடு பொன்னாடு: எங்கும் இதற்கு இல்லை ஈடு என்று மார்தட்டுகிறான் வாலிப வீரன், நாட்டின் நிலை உயர வேண்டும்; வளம் பெருக வேண்டும். செல்வம் வளர வேண்டும்; தொழில் செழிக்க வேண்டும்: ஒருவர் ஒருவரை அடக்குவது; சுரண்டுவது மேல் கீழ் என்று பேதம் காட்டுவது: விசாரத்தோடு விண்ணை அண் ணாந்து பார்ப்பது: வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று வேதாந்தம் பேசுவது; பிறவா வரம் தாரும் என்று சலிப்புச் சிந்து பாடுவது ஆகிய போக்கு.