பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


இன்று நம் சமுதாயம் மாறி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று நம் திராவிடப் பெருங்குடி இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு யார் காரணம் ? நம்முடைய தியாகராயர்தான். பேச்சுத் துறையிலே, பாடல் துறையிலே, வைத்தியத்துறையிலே, பொருளாதாரத்துறையிலே மட்டுமல்ல; எந்தத் துறையிலும் திராவிடர்கள் அவர்களுடைய வல்லமையைக் காட்ட முடியும். தியாகராயருக்குப் பின் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. இன்னும் மாறும் கடலடியில் சென்று முத்தெடுப்பவர்கள் என்றும் திராவிட இனத்தவரே. வேண்டுமானால் நாம் எடுத்த முத்து ஒரு ஆரிய மங்கையின் காதுகளை அணி செய்யலாம். ஆனாலும் கடலிருக்கிறது. கடலுள்ள அளவும் முத்து இருக்கும். முத்து உள்ள அளவும் நாமும் இருப்போம். ஆகவே நமக்கு எதிர்காலம் எப்போதும் உண்டு. ஆனால் ஆரியம், அறிவு வளர்ச்சியடைந்தபின் ஆரியமாக வாழாது. ஆரியமாக மதிப்புப் பொது. சாக்ரடீஸ், வால்த்தோ , லெனின் ஆகிய மூவரது புரட்சியின் கூட்டுறவு தம் இயக்கம்.

விசித்திர வைதீகர்கனை வீதி சிரிக்கவைத்தார் சாக்ரடீஸ், சாக்ரடீசுக்குப் பின்னர்தான் வால்த்தேர் வைதீகத்தின் மடமையை வாட்டினார். மூடநம்பிக்கையை முறியடித்தார். உலகமுணராத வைதீகா் உலகம் தட்டை என்று நம்பினர். ஆனால் அது உருண்டை என்று அவர்கள் உணர வைத்தார் காலிலியோ. அதற்காக காலிலியோ அன்று தாக்கப்பட்டார். இவ்வளவு புரட்சிக்குப்பின் ரூசோ கிளம்பி மக்கள் மன்றத்துக்கு மதிப்புத் தரவேண்டுமென்றார். வேத புத்தகத்தை, விபசார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிஃவ், ஜிவிங்கிளி, கால்வின் முதலியோர். பின்னர் முதலாளிகளின் கொடுமைக்காகப் போராடினார் காரல்மார்க்ஸ். காரல்மார்க்சுக்குப்பின் முதலாளிகளிடம் போராட லெனின் தோன்றினார்.