பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ ! இன்று உலகம் இவர்களைப்பற்றி என்ன பேசுகிறது?

ஜார் அரசனின் கொடுங்கோன்மையைக் களைந்து சமதர்மக் கொடியைப் பறக்கவிட்ட லெனினைப்பற்றி இன்று உலகம் என்ன பேசுகிறது?

மாஜி மந்திரி ஓமந்தூரார் இப்பொழுதுள்ள சர்க்காரைப்பற்றி விவசாயிகளிடையிலே என்ன பேச்சுப் பேசுகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு! மந்திரி அவிநாசி யார் இந்தி ஏகாதிபத்தியத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதைப் பார்த்தீர்களா? நிலைமை எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள்.

நாம் எவ்வளவோ வெற்றிகளைப் பெற்று வருகிறோம். திராவிட நாடு–ஜாமீன் வழக்கிலே நாம் பெரும் வெற்றி பெற்றோம். மக்கள் மன்றத்திலே இப்பொழுது பல வெற்றிகளைப் பெற்று வருகிறோம். எனெனில் நம் வாதத்தில் நேர்மை உண்டு. ஆம் அத்துடன் வாதாடுவதிலே நாம் திறமைசாலிகள் என்பதும் உண்மையே. அதையும் மறைப்பானேன்! வாதாடுவதிலே திறமையுள்ளவர்கள் என்பது மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். நம்முடைய வழக்குகள் நியாயமானவை, நேர்மையானவை. ஆதலால் தான் அவ்வளவு சுலபத்திலே நமக்கு வெற்றி கிடைக்கிறது.

தியாகராயர் வகுத்த அடிப்படை

தியாகராயர் தான் நாம் வெற்றிமேல் வெற்றி பெற வழிகாட்டினார். இருட்டு அறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம்கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்தது போல, தியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெள்ள மெள்ள ஏழை எளியோர் குடிசையில் குடி புகுந்து பின்னர் மாளிகைகளிலெல்லாம் சென்று மக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கி விட்டது.

சர். தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார். அதிலே தலை சிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பன-