இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
<poem>
அறுபத்து நான்குதிரு விளையா டல்கள்
- அணிசெய்த நான்மாடக் கூடல் தன்னில்,
அறுபத்தொன் றாமாண்டில், மூன்றாம் சுற்றில்,
- அழகுடனே மாநிலமா நாடு கூட்டத்
தறுகண்முத் துத்தமுக்கம் திடலைக் கேட்டார்.
- தரமறுத்தார் நல்லவராம் ஆட்சி யாளர்!
"மறுபடிஓர் நாள்வரும்; நான் பார்த்துக் கொள்வேன்
- மறவாதீர்!" என்னுமறை கூவல் விட்டார்!
தேர்தலுக்கு நிதிதிரட்டும் மாநாடாகத்
- திருப்பரங்குன் றத்தில்நாம் சிறப்புப் பெற்றோம்.
"யார் தயவும் கோரவில்லை!" என்ற பாங்கை
- இன்னொருகால் நிலைநிறுத்திக் கொண்டார் அண்ணா,
நீர்பெருகித் தஞ்சையெல்லாம் மூழ்கி நிற்க,
- நேரடியாய்த் தலைமையுரை நிகழ்த்தி விட்டுப்
போர்முனைக்குச் செல்பவ்ர்போல் படகில் சென்றார்!
- பொல்லாங்கு களைவதற்கும் உதவி செய்தார்!