பக்கம்:அண்ணா காவியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அண்ணா காவியம்


<poem> பாரதத்துப் போர்க்களத்தில் கர்ண னோடு

பார்த்தனவன் ஆர்த்தெழுந்து மோதும் போது,

சாரதியாய் வீற்றிருந்த கண்ணன், தம்பால்

சரம்பாய்ந்து வருவதனைத் தவிர்ப்ப தற்கு,

மாரதத்தைக் கீழழுத்தித் திறமை யாக

மைத்துனனைக் காத்தபழங் கதையைப் போல

வீரதத்து வந்தெரிந்து வினைசெய் அண்ணா

விடுதலையைக் கைவிட்டுக், கழகம் காத்தார்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/132&oldid=1079957" இலிருந்து மீள்விக்கப்பட்டது