இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152
மறுபடியும் அமரிக்கா சென்ற போழ்தில்
மருத்துவராம் மில்லரிடம் சிகிச்சை பெற்றார்.
அறுபதாம் பிறந்தநாளில் திருச்சி-தஞ்சை
அண்ணனுக்குச் சிலையெடுத்த அதேநேரத்தில்...
அறுவையெல்லாம் நன்முறையில் முடிந்ததாக
அறிவித்தார் நம்கலைஞர்! களிப்பில் மூழ்கிப்
பொறுமையுடன் காத்திருந்தோம் வருகைக் காகப்...
பொல்லாங்கு தொடருமென அறிந்தோ மில்லை!
எண்பதாண்டு கடந்தவர்போல் அண்ணன் மீண்டார்! :ஏனென்று புரியவில்லை; வந்தால் போதும்...
கண்குளிரக் காண்பதொன்றே நிறைவ ளிக்கும்!
காலமெல்லாம் அவர் நிழலில் குளிர்ச்சி கண்டோம்.
மண்பெருமை நிலைப்பதற்கும், மாதா வுக்கு
மகனாற்றும் கடமையினை முடிப்பதற்கும்.
ஒண்புகழ்சேர் தமிழ்நாடென் றுரக்கக்கூவி
உடல்நிலையைக் கருதாமல் நிறைவு செய்தார்!