பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

113


அண்ணாவின் தொடக்க வரிகள் சிலவற்றையும், முடிவு வரிகள் சிலவற்றையும், அக்கருத்தை வைத்து நான் வெண்பாத்தளையில் எழுதிய வரிகள் சிலவற்றையும் இங்கு பார்ப்போமா?

சின்னாட்களுக்கு முன்பு நான்
சிரிப்பைக் கிளறிடும் படமென
செப்பினர் நண்பர்கள் என்பதால்
சென்றேன் கண்டிட ஆங்கிலப் படமதை.
சிந்தனை தன்னைக் கிளறியதப்படம்
சிரிக்கவும் வைத்தது என்னை மெத்தவும்.
ஆங்கிலப் படமது: ஆகவே அதிலே
ஆங்கில வாழ்க்கை முறை இருந்தது.
-இது அண்ணா.
ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
பாங்குடன் கண்டு பரிந்துரைத்தார் நண்பர்,
விருப்போடு வேண்டியதால் சின்னாள்முன் சென்றேன்.
சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
நேர்ந்தது, மேனாட்டார்.நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
தேர்ந்த சிறந்த கதை; சீராம் கருத்துக்கள்.
-இது நான்.
பணம் படுத்தும் பாடுதனை உணர்த்திடவும்
பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டுவிடும்
பாழ்நிலையை, விபத்ன்த் விளக்கிடவே
படம் மெத்தத் தர்மரக்ப் புலன் அளித்திடவே
பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன்
சிந்தைக்கு விருந்து பெற
வழி இருந்திடக் கண்டு
மகிழ்ந்திருந்தேன் நானே!
-இது அண்ணா.

அ.-8