பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

அண்ணா—சில நினைவுகள்


என்றுதான், அண்ணா இன்றைக்கு ஒரு Diversion கொடுத் துட்டார் என்று நினைக்கிறேன். Anyhow ஒரு நல்ல Serious Subject பற்றி இன்று ஆழமாகச் சிந்திக்கும்படி செய்துட்டார். Thank you வருகிறேன்” என்று அவரும் புறப்பட்டார்.

அண்ணா விடைபெற்றுச் சென்றபோது, முகத்தில் கவலை படர்ந்த தோற்றம் தென்பட்டது. என் வீட்டுப் பிள்ளைகள் ராசகோபால், ராணி, மாதவி, குலோத் துங்கன் நால்வருமே அதுவரையில் சாப்பிடாமலிருந்து, அண்ணாவின் பொருள் செறிந்த உரையாடலைக் கேட்டு மகிழ்வுற்றனர்.