பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருனானந்தம்

l67

1956 “திராவிட நாடு” பொங்கல் மலரில் நான் இப்படி ஒரு கவிதையை எழுதியிருந்தேன்

உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்,
அறநெறி பரப்புங் குறள்நெறி தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தந்நேர் இல்லாத் தமிழக உழவர்–
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்!
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!
ஆயினும், அன்னார் நாயினுங் கீழாய்
நலிந்துளம் நொந்து, மெலிந்துடல் வாடி,
வறண்ட பாலையில் இருண்ட வேளையில்
திரண்டெழுங் காற்றிற் சிக்கியோர் போலத்
திகைத்து மீளவும் வகையறி யாது,
சுதந்திரம் என்ற இதந்தரும் பெயரால்
கொடுங்கோல் ஆட்சிக்கு இடங்கொடுத்து உயர்த்தித்,
தாய்மொழி மறந்து, தனி அரசு இழந்து,
வாய்மை தவறி, வாழ்வினில் தாழ்ந்து,
உழைப்பதற் கேற்ற ஊதியம்-உயிருடன் த
தழைப்பதற்கான சாதனம் இன்றி,
நெடிய வறுமைக்கு அடியவர் ஆகி,
முன்னேறும் நிலை எந்நாள் வருமெனக்
கண்ணிர் சிந்திக் காத்திருக் கின்றார்!
பாட்டாளி மக்கள் படுத்துயர் தொலைத்து
நாட்டிலே இன்ப நன்னிலை பொங்க
மூட்டுவோம் உணர்வொடு முயற்சித் தீயே!

ஏழாண்டுகட்கு முன்னர் நான் எழுதிய இப்பாட்டை அண்ணா அவர்கள் தேடிப்பிடித்து, 1963 “திராவிட நாடு” பொங்கல் மலரில் தாம் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியில்...