இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
77
மூச்செல்லாம் தமிழுக்கே முயற்சி யாவும்
- முன்னோர்கள் ஆண்டநாட்டை மீட்ப தற்கே!
பேச்செல்லாம் பிறர் வாழ! பிறந்த நோக்கம்
- பேடிகளின் ஆதிக்கம் ஒடச் செய்ய!
திச்சொல்லால் பயனில்லை; திருத்திப் பார்ப்போம்!
- திராவிடரின் மரபென்றும் எடுத்துச் சொல்வோம்!
ஏச்செல்லாம் பூச்செண்டு மாலையாகும்
- என்றுரைக்குத் தலைவரெலாம் இங்கே தானே!
குன்றாத செல்வங்கள் எல்லாம் உண்டு;
- குனியாமல் வாழ்ந்ததற்கு வரலா றுண்டு!
அன்றாட நிகழ்ச்சிக்கும் வடநாட் டான்யால்
- அடிபணிந்து கிடக்கின்ற உணர்வும் உண்டு!
என்றேனும் ஒருநாளில் மீட்சி பெற்று
- எமதரசு காண்பதற்கும் ஏக்கம் உண்டு!
ஒன்றாக இவற்றையெல்லாம் சேர்ப்ப தற்கு
- உதவிடும்நாள் மே.திங்கள் பதினேழாம் நாள்!
மலைகளிலே கிடைக்கின்ற மணிகள் தேடி,
- மண்ணுக்குள் புதைந்திருக்கும் பொன்னும் சேர்த்து
அலைகடலில் ஆழ்ந்துறையும் முத்தும் வைத்து
- அணிகலன்கள் அமைக்கின்ற தொழில்வல்லார் போல்
நிலைமறந்தோர் பழங்கால சரிதம் தேடி
- நெஞ்சத்திற் புதைத்திருக்கும் உணர்வைச் சேர்த்து
தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவு வைத்துத்
- தனிநாடு சமைத்திடுவோர் தயார்தான், வாராய்!