பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

77


மூச்செல்லாம் தமிழுக்கே முயற்சி யாவும்

முன்னோர்கள் ஆண்டநாட்டை மீட்ப தற்கே!

பேச்செல்லாம் பிறர் வாழ! பிறந்த நோக்கம்

பேடிகளின் ஆதிக்கம் ஒடச் செய்ய!

திச்சொல்லால் பயனில்லை; திருத்திப் பார்ப்போம்!

திராவிடரின் மரபென்றும் எடுத்துச் சொல்வோம்!

ஏச்செல்லாம் பூச்செண்டு மாலையாகும்

என்றுரைக்குத் தலைவரெலாம் இங்கே தானே!


குன்றாத செல்வங்கள் எல்லாம் உண்டு;

குனியாமல் வாழ்ந்ததற்கு வரலா றுண்டு!

அன்றாட நிகழ்ச்சிக்கும் வடநாட் டான்யால்

அடிபணிந்து கிடக்கின்ற உணர்வும் உண்டு!

என்றேனும் ஒருநாளில் மீட்சி பெற்று

எமதரசு காண்பதற்கும் ஏக்கம் உண்டு!

ஒன்றாக இவற்றையெல்லாம் சேர்ப்ப தற்கு

உதவிடும்நாள் மே.திங்கள் பதினேழாம் நாள்!


மலைகளிலே கிடைக்கின்ற மணிகள் தேடி,

மண்ணுக்குள் புதைந்திருக்கும் பொன்னும் சேர்த்து

அலைகடலில் ஆழ்ந்துறையும் முத்தும் வைத்து

அணிகலன்கள் அமைக்கின்ற தொழில்வல்லார் போல்


நிலைமறந்தோர் பழங்கால சரிதம் தேடி

நெஞ்சத்திற் புதைத்திருக்கும் உணர்வைச் சேர்த்து

தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவு வைத்துத்

தனிநாடு சமைத்திடுவோர் தயார்தான், வாராய்!