பக்கம்:அநுக்கிரகா.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

51

"நிச்சயமா முடியுங்க, எப்படியும் மந்திரி சபையிலே பொம்பளைக்கின்னு ஒரு இடம் தலைவர் ஒதுக்கி வச்சிருப்பார். அதுவும் கொஞ்சம் படிச்ச பொம்பளையா வேணும்னு பார்ப்பார்."

"வேற படிச்ச பொம்பளைங்க உங்க கட்சியிலே இல்லியாப்பா?"

“ரெண்டொருத்தர் இருக்காங்க. ஆனா அது அம்மா அளவு அதிகம் படிச்சிருக்க மாட்டாங்க. நாமே அவங்களை ஏதாச்சும் கொடுத்துத் தன்னைக் கட்டிட்டம்னா அவங்க வாயாலேயே அது அம்மா பேரை மந்திரி பதவிக்குப் பிரப்போஸ் பண்றாப்ல செஞ்சு காரியத்தை முடிச்சுடலாம்."

முத்தையாவுக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது.


8

அநுவின் இரண்டாவது கூட்டம் படுகொலைக்குப்பம் மாரியம்மன் தேரடித் திடலில் ஏற்பாடாயிற்று. முத்தையாவிடம் வழக்கத்தைவிட மேலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்று வற்புறுத்திக் கேட்டான் பொன்னுரங்கம். முத்தையா தயங்கினார்.

"என்னப்பா இது, நெல்லுப்பேட்டை மைதானத்துக்கே அவ்வளவுதான் ஆச்சு! படுகொலைக்குப்பத்துக்கு மட்டும் எதுக்காகக் கூட ஆயிரம் ரூபாய் கேட்கிறே?"

"தேவைப்படும்னு தான் கேட்கிறேன். இது ரௌடி ஏரியா. இங்கே கனிவண்ணன் கோஷ்டி ஆளுங்க அதிகம். அநு அம்மா கூட்டத்தைக் கலைக்கணும்னே கனிவண்ணன் கூட்டத்திலே கலாட்டாப் பண்றதுக்கு செட்அப் பண்ணுவான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/53&oldid=1256762" இலிருந்து மீள்விக்கப்பட்டது