இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142
கதையைக் கேட்ட இளம் காதலர்களும் அவரவர்களின் வாழ்க்கை லட்சியத்தில் வெற்றிபெற்று இன்ப வாழ்க்கை வாழ்வார்களானால், அதுவே போதும்; அதுதான் என் ஆசை அதுதான் நான் இந்த ஜென்மத்தில் கடவுளிடம் கோரும் கைமாறு. என் தங்கையைப் போன்ற இந்நாட்டு இளம் சகோதரிகள் சுகமடைவதற்காக, இந்தியத் தாயால் ஈன்றெடுக்கப்பட்ட நான் இந்த அந்தமான் தீவில் ஒரு கைதியாக இருப்பதில் எனக்குத் திருப்திதான். என்னைப் பார்த்தாவது இந்நாட்டுத் தாய் தந்தைமார்களுக்குப் புத்தி வந்தால், அதுவே இந்த அந்தமான் தீவை எனக்கு இந்திரலோகமாக்கிவிடும்.
பெ.கைதி: அப்பா! நீ பெரிய வைராக்கியசாலிதான், உம் சரி-நாழிகை அதிகமாகிவிட்டது. வார்டர் தேடுவார், வா போகலாம்.
(போகிறார்கள்.)