35
லீலா : என்னமோ நாய் முழுத் தேங்காய்க்கு ஆசைப்பட்ட கதையைப் போலத்தான்.
பாலு : ஏன் லீலா! நாம் இருவரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது? அப்பா அம்மா இருவரும் சில நாளாக மெள்ளக் கலியாணப் பிரச்னையை ஆரம்பம் செய்கிறார்கள். எனக்கோ வாய்விட்டு அவர்களிடம் சொல்ல யோசனையாயிருக்கிறது.
லீலா : (நீண்ட பெருமூச்சுடன்) யோசனையின் முடிவு இரண்டில் ஒன்றுதானே?
பாலு : லீலா என்ன சொல்லுகிறாய்?
லீலா : ஒன்றுமில்லை ஒன்று வாழ்வு. இல்லையேல் சாவு இது தானே... என் முடிவு... அதுதான் உங்கள் முடிவில் இருக்கிறது என்றேன். நான் வேறென்ன சொல்வேன்?
பாலு : (பதட்டத்துடன்) இல்லை, இல்லை. லீலா! நீ அப்படி ஒன்றும் தவறாக நினைத்துவிடாதே. அதற்காகத்தானே அவர்கள் வார்த்தைக்குப் பிடிகொடுக்காமலே நாளைக் கடத்திக் கொண்டு வருகிறேன். லீலா அதோ பார்த்தாயா! இப்பொழுதுதான் வானத்தில் பூரணச் சந்திரன் உதயமாகிறான். ஆஹா!
பாலு : ஒளி நிலவின் எழில் பாராய்!
லீலா : உமையே நிகராமோ!
(ஓ)
பாலு : களிநடமிடு மயில் போலே!
லீலா : காதலரே நாமே!
பாலு : பூதல் மேல் மகிழ்வோம்
(ஓ)
லீலா : இனிதாகும் மலராவேன்!