47
நட : ஆமாமா, மாமாவைப் பாடையிலே வைக்கிறதுக்கு நாலு ஆள் வேண்டியதுதான்.
காமா : அடே! ஏண்டா உனக்கு இந்தத் துர்ப்புத்தி?
நட : போதுமம்மா. போதும் உன் ஞானோபதேசம் எல்லாம் எனக்குத் தெரியும். அவன் பட்டம், பதவி எல்லாம் உனக்குத்தான் பெரிது......... அந்த மடை யனின் தங்கைதானே நீ.
காமா : ஆமாம், அந்த மடையனில்லாமே வேறே எந்த புத்திசாலிதான் உன் தங்கையை வந்து கட்டிக்கப் போறான்னு பார்ப்போமே! சேச்சே, இனிமை அரை நாழிகூட இந்த வீட்டிலே இருக்க யோக்கியதை இல்லே.
நட : ஆமாம், ஆமாம், பெரிய திவான்பகதூரின் தங்கையல்லவா நீ? இந்த ஏழைக் குடிசையிலே இருக்கக் கூடாதுதான். நன்றாக மேள தாளத்தோடு இப்பொழுதே வேண்டுமானலும் போகலாம்.
காமா : இல்லை. அவன் இல்லாமே நீதான் என்னெ வச்சுத் தாங்கப் போறே.
நட : இல்லே! இதுவரை அவன்தான் உனக்கு மாதா மாதம் படியளந்துகொண்டு வந்தான். கிழட்டு. அயோக்கியப் பயல் (போகிறான்.)