66
முனி : சிறுசு தானுங்களே இன்னமே நீங்கள்தான் எல்லாம் சரிப்படுத்திக் கொண்டாரணும்.....அதோ அந்த அம்மாகூட வந்துட்டாங்களே!
பொன்: வாவா! காமாட்சி வாம்மா! இப்படி உட்கார். அடாடா! இவ்வளவு தூரம் நடந்தா வந்தே? நீ வருவாயென்று இப்பொழுதுதான் முனியாண்டி சொன்னான், என் காரையே அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன்; அதற்குள்......
காமா : பரவால்லேண்ணா. இந்தப் பாழாப்போன கட்டைக்கு காரு வேறையா வேணும் காரு!
பொன் : ஏன் காமாட்சி! நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய்? என் மூச்சு உள்ளவரை உனக்கென்ன குறை? உன் குணம் எனக்குத் தெரியும். உன் மகன் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் உங்களை இப்படிக் கஷ்டப் பட விட்டிருப்பேனா?
காமா : ஆமாம். யார் இருந்து என்ன? என்னமோ பாடி பரதேசியா யிருந்தாலும் முனியாண்டி சமயத்திலே வந்து உதவினான். அவனாவது இந்தச் சமயத்திலே உதவாமல் இருந்திருந்தால் குடியிருக்கிற குச்சையும் இழந்துவிட்டு என் பிள்ளைகுட்டிகளோட நான் சந்தியிலே நிற்கவேண்டியதுதான்.
பொன் : ஓகோ! நீ அப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறாய்! இந்தத் திவான்பகதூர் பொன்னம்பலம்பிள்ளை மனது வைக்காமல் இருந்திருந்தால், முனியாண்டியும் உதவியிருப்பான்! சேர்வையும் சும்மா விட்டிருப்பான்! செட்டியும் இந்தக் காலிக் கழுதையைக் கூட்டிக்