75
செய்யலாம். அவர் விஷயத்தில் ஜாக்ரதைக் குறைவாய் இருக்கலாமா?
லீலா : அவர் பணமும், பட்டமும், பதவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் மட்டும் ஒரே உறுதியாக இருந்தால் நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது. சரி, நாழியாகிவிட்டது; இந்நேரம் அம்மா வந்திருந்தாலும் வந்திருப்பார்கள். நீங்கள் நாளை மாலை வருகிறீர்களா!
பாலு : ஆமாம், இப்போது உன் தாயார் எங்கே போயிருக்கிறார்கள்?
லீலா : மாமா வீட்டுக்குத்தான். அதுதான் முன்பே சொன்னேனே!
பாலு : ஆமாம் மறந்து விட்டேன்...... நாளை நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியூர் போகிறேன். வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அநேகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திக்கிறேன்.
லீலா : ஞாயிற்றுக்கிழமையா? வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு அம்மாடி! நான்கு நாட்களா ஆகும்? அது வரை நான் எப்படி உங்களைப் பார்க்காமல் இருக்க முடியும்? அப்படி என்ன முக்கியமான வேலை அது?
பாலு : கால் பந்து விளையாட்டுப் போட்டிக்காக எங்கள் காலேஜ் மாணவர் குரூப் ஒன்று வெளியூர் புறப்படுகிறது! அத்துடன் நானும் போக வேண்டும். கண்டிப்பாய் எப்படியும் ஞாயிற்றுக்கிழமை மாலை உன்னை இதே இடத்தில் சந்திக்கிறேன். நான் வரட்டுமா?
லீலா : ஞாயிற்றுக்கிழமை மாலை மறந்துவிடமாட்டீர்களே!