இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77
விட்டாங்க. கழுத்திலே கயத்தைப் போடுறதுக்கு நாள் பாத்துட்டா கல்யாணம் முடிஞ்சமாதிரி தான். உம், புறப்படுங்க.
ஜம்பு : சரி. நான் முன்னாடிப் போறேன்; நீ போயி நம்ம பாலகிருஷ்ண சாஸ்திரியேக் கையோட இழுத்துக் கிட்டுவா.
பையன்: இதோ!-
(போகிறார்கள்)
இடம் : நடராஜன் வீடு
பாத்திரங்கள் : லீலா காமாட்சி.
லீலா : இது என்ன அம்மா மூட்டை முடிச்சுகளெல்லாம் பலமாயிருக்கிறதே! இவை யெல்லாம் என்ன?
காமா : எல்லாம் ஒனக்காகத்தான். இந்தா இதை வாங்கி அப்படிவை.
(எல்லாவற்றையும் வாங்கி வைக்கிறாள்)
வேலை ஆள் : நான் போயிட்டு வரட்டுங்களா அம்மா?
காமா : மகராசனாய் போயிட்டு வாப்பா. போயிட்டுவா.
(போகிறான்)