பக்கம்:அந்தமான் கைதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

 பிரண்ஸுகளுக்காகவே டின்னரெல்லாம் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருக்கிறேன்.

பாலு : (பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டு ஆச்சரியத்தோடு) என்ன! பெண் யார்? லீலாவா?

ஜம்பு : ஆமாம்! நடராஜன் சிஸ்டர் நம்முடன் படித்துக் கொண்டிருக்க வில்லையா? அடடே! நான்கூட மறந்து விட்டேனே, உனக்கும் அவளுக்கும் கூட முன்னே கொஞ்சநாள்...ரொம்ப......

பாலு : ஊஹூம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது அதைப்பற்றிப் பேசி என்ன பயன்?

ஜம்பு : ஆமாம்; இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்ப முடிகிறது? எல்லாம் பணத்தில்தான் இருக்கிறது. எவ்வளவு அன்யோன்யம், எவ்வளவு தூரம் நீ நம்பியிருப்பாய்? என்ன இருந்தாலும், லீலா உன்னை இப்படி மோசம் செய்திருக்கவே கூடாது. என்ன செய்வது, பணம் பாதாளம் மட்டும் பாயுமல்லவா?

பாலு : இதெல்லாம் உலகத்தில் சகஜம். சரி, நேரமாய் விட்டது. நான் வரட்டுமா?

(பதிலை எதிர்பார்க்காமலே போய் விடுகிறான்.)

ஜம்பு : (பரிகாசத்துடன் சிரித்து) மடையன்! சகஜமாம் சகஜம், "சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்” என்ற கதைப்போல் இருக்கிறது; காதலாம் கத்தரிக்காயாம். இதெல்லாம் இந்த ஜம்புவிடமா பலிக்கும்? நாளை அவள் திவான்பகதூர் மனைவி; அடுத்தநாள் என் காதலி. இதுதான் பிரமாதம்?

(போகிறான்..)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/84&oldid=1069793" இலிருந்து மீள்விக்கப்பட்டது