பக்கம்:அந்தமான் கைதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


முனி : இல்லையே அடுத்த மேளம் இப்ப வந்துடும். ஐயர் வந்து தயாரா இருக்கிறாரு. பொண்ணழைக்க அப்பவே கார் அனுப்பியாச்சு பொண்ணு வந்ததும் திருப்பூட்ட வேண்டியதுதான். நீங்க ஒண்னுங் கவலெப்படாதிங்க, இந்தக் கலியாணம் ஒங்க கலியாணமே இல்லே. எங்கல்யாணம்.

பொன்: ஊம் சீக்கிரம் போl முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. நீ போனால்தான் இதெல்லாம் சீக்கிரம் நடக்கும்.

முனி : ஆஹா இதோ ஒரு கொடியிலே வர்ரேன்.

(புறப்படத் திரும்புகிறான்.)

பொன் : முனியாண்டி! அங்கே கல்யாணக் கூடத்தில் யார் யார் இருக்கிறார்கள், பார்த்தாயா? பெரிய மனிதர்கள் எல்லாம் வருவார்கள், எல்லோரையும் மரியாதையாய் வரவேற்று சந்தனம் தாம்பூலம் கொடுக்க நல்ல ஆட்களாக......

முனி : அதெல்லாம் கவனிச்சிக்க கணக்கப்புள்ளே அங்கேயிருக்கிறாருங்க! ஒங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். நீங்க சுருக்கா அலங்காரத்தை முடிச்சிக்கிட்டு வாங்க; அதுக்குள்ளே நான் போயிப் பொண்ணெக் கூட்டியாரேன்.

(முனியாண்டி போகிறான்)

பொன் : (வேலையாள் ஒருவன் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். பொன்னம்பலம் தன்னைக் கண்ணாடியில் பார்த்து மீசையை முறுக்கிக்கொண்டு விரைப்பாக நிமிர்ந்து வேலையாளைப் பார்த்துக் கேட்கிறார்) என்னடா! எப்படி இருக்கிறது? எல்லாம் சரியாய் இருக்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/91&oldid=1071990" இலிருந்து மீள்விக்கப்பட்டது