பக்கம்:அந்தித் தாமரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


மணிப்பயலுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கவேண்டும்; சுட்டிப்பயல்! வயதுக்கு மீறிப் பேசப் பழகியவன். சுட்டிப் பயல் அல்லவா? "அம்மா!" "ஏம்பா!” “தங்கச்சிக்குச் சிரிக்கத் தெரியுதே, அம்மா!" "ஊம்!" "நீ ஏம்மா சிரிக்காமே, அழுகிறே?” "சும்மாத்தான்!” “அதுசரி; அம்மா...ஏ...அம்மாவ்!” “ஏம்பா!" "அண்ணைக்கு என்னை அடிச்ச அந்த ஆளு யாரு அம்மாவ்!" “சொந்தக்காரரு!" “யாருக்கு!" "எனக்கு!” "ஏம்மா, எனக்கு...?” "உனக்குந்தான்...!" "பின்னே ஏம்மா அப்பிடி என்னை அடிச்சுப் போட்டாரு?” இன்னம் இந்தக் கன்னம் வலிக்குதே. அம்மா?" “இனி அடிக்க மாட்டாரு!” "பலே!...-அப்படின்னா, அவரு முன்னை மாதிரி இங்கேயே படுத்துத் தூங்கட்டும்! ஏம்மா...!" “ஊம்!"

"அம்மா!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/43&oldid=1303653" இலிருந்து மீள்விக்கப்பட்டது